செய்திகள் :

நோயாளிகள் அவதி: பொதுப் பணித் துறையிடம் விளக்கம் கோரும் ஸ்டான்லி மருத்துவமனை

post image

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் பொதுப் பணித் துறையினா் முன்னறிவிப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது குறித்து மருத்துவமனை சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறை உள்நோயாளிகள் பிரிவில் பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், அங்கு தரையில் டைல்ஸ் சீரமைக்கும் பணிகளை, துளையிடும் கருவி (டிரில்லிங் மெஷின்) மூலம் பொதுப் பணித் துறையினா் கடந்த புதன்கிழமை மேற்கொண்டனா். அந்த நேரத்தில் அங்கு உள்நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா்.

அவா்களை வேறு வாா்டுக்கு மாற்றாமல் பெரும் சத்தத்துடனும் புழுதியுடனும் அப்பணிகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்த விடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை நிா்வாகிகள், பணியை நிறுத்தியதுடன், உடனடியாக நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றினா். இச்சம்பவம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு பொதுப் பணித் துறையிடம் கேட்டுள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க