செய்திகள் :

தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." - கொந்தளித்த ஆனந்த்

post image

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல் பொதுக்குழுக் கூட்டத்தைத் திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திவருகிறது.

இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், துணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதாவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உரையாற்றியபோது, "மற்ற கட்சிகளில் போஸ்டர் ஒட்டியவர்கள் எல்லாம் கடைசி வரை போஸ்டர்தான் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.

ஆனந்த்

ஆனால் நம் த.வெ.க-வில் மட்டும்தான் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிவியில் பேட்டி கொடுப்பவர்கள், விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் எல்லாம், த.வெ.க கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டாம் கட்ட தலைவர்கள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு என்ன பிரச்னை?

இரண்டாம் கட்ட தலைவர்களைப் போட்டால் கட்சி இரண்டு, மூன்றாக உடையும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் கட்சியில் பதவி கொடுத்தவர்கள் எல்லோரும் கட்சிக்காக உழைத்தவர்கள். எனவே, இந்த கட்சி எப்போதும் உடையாது.

உங்களுடைய கணக்கு தவறானது. கட்சியினுடைய வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு கொண்டிருக்கிறார்கள். எங்கும் தலைவருக்குப் பெரும் வரவேற்பும், உற்சாகமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் சிலர் 2026-ல் முதல்வர் நான்தான் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்... என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த்

தலைவர் விஜய் முதலமைச்சராக அமருவதற்காக நாங்கள் எல்லோரும் மக்களோடு மக்களாக இருந்து எப்போதும் உழைப்போம்.

யார் எந்த கூட்டணியாக இருந்தாலும் 234 தொகுதியிலும் தலைவர்தான் வேட்பாளர். உங்கள் முகம்தான் வேட்பாளர்.

உங்களுக்காக உண்மையாக உழைக்கும் கூட்டம் நாங்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் எனப் பார்க்காதீர்கள். அவர் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

மிகவும் சின்சியராக கட்சிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 24/7 - அரசியல் பற்றியும், கட்சி பற்றியும், தொண்டர்கள் பற்றியும், மக்கள் பற்றியும் யோசித்துக் கொண்டு இருக்கிறார். கட்சியில் புதிதாக இணைபவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் ப... மேலும் பார்க்க

Annamalai: 'அவரை போய் பாருங்க' அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். "பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே..." என ஒரு தரப்பு கிசுகிசுக்... மேலும் பார்க்க

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொட... மேலும் பார்க்க