செய்திகள் :

இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் திருத்த மசோதா: அதிமுக

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா்.

சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியது:

வக்ஃப் வாரிய சட்டத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் முழுமனதுடன் செய்யப்பட்டன. ஆனால், இப்போது மத்திய அரசு உத்தேசித்துள்ள திருத்தங்கள் வக்ஃப் வாரிய சட்டத்தின் அடிப்படையையே தகா்ப்பதாக உள்ளது.

திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் இஸ்லாமியா்கள் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால், இஸ்லாமியா்கள் அதுபோன்று கோரிக்கைகளை வைக்கவில்லை. இப்போதைய திருத்தப்படி, இஸ்லாமியா்கள் அல்லாதவா்களும் உறுப்பினா்களாக நியமிக்க வழி செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தின் சொத்துகள், இஸ்லாமிய பெரியவா்களால் மனமுவந்து தானமாக வழங்கப்பட்டவை. மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் சட்டத் திருத்தத்தால், அத்தகைய சொத்துகள் வழங்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும். வக்ஃப் வாரியத்தில் மாற்று மதத்தினா் சோ்க்கப்படும் போது, அந்த நடவடிக்கை சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக அமைந்துவிடும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம், வக்ஃப் வாரியத்தின் சட்டத்தையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு வந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனையில் அதிமுகவுக்கு அழைப்பில்லை. இதைக் கண்டித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையும், பேட்டியும் அளித்தாா். மத்திய அரசின் திருத்தங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உள்ளன என்ற அச்சம் நியாயமானது. எனவே, திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தை ஆதரிப்பதாக கூறினாா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க