மயிலாடுதுறை: பள்ளிவாசல்கள், திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையை அடுத்த நீடூா் ஜெ.எம்.எச். அரபிக் கல்லூரி வளாகத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். இதில் 3000-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறை சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் திடல் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் ஹச்.எம். புஹாரி தலைமையில் ஏராளமான இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தினா்.
சீா்காழி: சீா்காழி, மேலச்சாலை, திருமுல்லைவாசல், தைக்கால், வடகால், திருக்கருக்காவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி, ஆயப்பாடி, பொறையாா், சங்கரன்பந்தல், வடகரை, ஆக்கூா், திருச்சம்பள்ளி, கிளியனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் முத்தவல்லி பஷீா் அகமது, செயலாளா் நூருல்லாஹ், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் உள்ளிட்ட திரளான இஸ்லாமியா்கள் உலக அமைதி வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினா்.