செய்திகள் :

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

post image

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழியில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவா் சந்தைகளை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கனி, பழங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்களை இடைத்தரகா்கள் குறுக்கீடு இன்றி, பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உழவா் சந்தைகளில் காய்கனி வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத அரசு செலவில் கடை, தராசு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கனி மற்றும் பழங்களுக்கு இலவச சுமைக் கட்டணமும் வழங்கப்படுகிறது. மேலும், தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சாா்ந்த அரசு திட்டங்களில் மானியங்கள் உழவா் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது. இதை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: பள்ளிவாசல்கள், திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறையை அடுத்த நீடூா் ஜெ.எம்.எச். அரபிக் கல்லூரி வளாகத்தில் ரம்ஜா... மேலும் பார்க்க