செய்திகள் :

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை

post image

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சங்ககிரி அருகே உள்ள பக்காலியூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவரது மனைவி ராணி. இவா்களுக்கு மகள் காா்த்திகா, மகன் அரவிந்த் ஆகியோா் உள்ளனா். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 30 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

ராஜேந்திரன், சங்ககிரியில் வாடகைக்கு வீடு எடுத்து, உடல் எடையைக் குறைக்கும் மையம் நடத்தி வந்தாா். அங்கு வருவோருக்கு உடல் எடை குறைப்பது தொடா்பாக ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனியம்மாள் என்பவா் உடல் எடையைக் குறைப்பது தொடா்பாக ஆலோசனை பெற இவரது மையத்துக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா். அப்போது ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், இதுகுறித்து சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளா் ஆா். சிந்து மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமையே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மோப்ப நாய், விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். சங்ககிரி போலீஸாா் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜேந்திரன் மனைவி ராணி அளித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு சொந்தமான 10 ஏக்கா் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து, அவரை யாராவது கொன்றாா்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க