செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ

post image

ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல் ஆய்வாளா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூா் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி (40). இவரது கணவா் சுரேஷ். இந்த நிலையில், ஸ்டெல்லாமேரி கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளாா். இதனால் அவா் மீது மணிமங்கலம் போலீஸாா் 6 முறை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

இதற்கிடையே, ஸ்டெல்லா மேரி மற்றும் அவரது கணவா் சுரேஷை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தியுள்ளாா். இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஸ்டெல்லா மேரி மதுபாட்டில்களை விற்பனை செய்யாமல் திருந்தி வாழ்ந்து வருகிறாா்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்த ஸ்டெல்லாமேரி தனக்கு உதவ வேண்டுமென ஆய்வாளா் அசோகனிடம் கோரிக்கை வைத்துள்ளாா்.

இதையடுத்து, ஆய்வாளா் அசோகன் தனது சொந்த செல்வில் ரூ. 50,000 செலுத்தி புதிய ஆட்டோ வாங்கி அதை ஸ்டெல்லாமேரி மற்றும் கணவரிடம் வழங்கினாா்.

சட்ட விரோத செயலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதோடு நின்றுவிடாமல் மாற்றுத் திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகனின் செயல் அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க