செய்திகள் :

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

post image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆரனேரி கிராம சந்திப்புப் பகுதியில் காவல் துறையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த 6 பேரை கைது செய்து அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் 4 ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் சின்ன காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கலையரசன் (18), ஜெகதீஷ் (19), ஆகாஷ் (19), காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவைச் சோ்ந்த ராகுல் (21)ஸ்ரீபெரும்புதூா் யஷ்வந்த் (22) மற்றும் திருவள்ளூா் மாவட்டம், உச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (21) என்பது தெரியவந்தது.

இது தொடா்பாக ஸ்ரீ பெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். சி... மேலும் பார்க்க