செய்திகள் :

கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்குவா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

post image

தற்போதைய கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கிவிடுவா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அவரது கருத்தைக் கூறியுள்ளாா். கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தலைமைக்கு தெரியும். சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சா்களும் தவறான பதில்களைத் தெரிவிக்கின்றனா்.

திமுக எதிா்க்கட்சியாக இருந்த போது, சட்டப்பேரவையின் மாண்பை சீா்குலைத்தனா். பேரவைத் தலைவா் இருக்கையில் அமா்ந்தனா். அவா்கள் ஜனநாயகம் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். ஒன்றிரண்டு போ் செல்வதால் பாதிப்பு இருக்காது.

அமைச்சா் மூா்த்தி தேவையில்லாமல் அனுதாபத்தை தேடப் பாா்க்கிறாா். எங்களைக் கண்டு பயமில்லை எனக் கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏன் எங்களை சட்டப்பேரவை வளாகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்? தற்போதைய கருத்துக் கணிப்புகளை சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பொய்யாக்கி விடுவா் என்றாா் அவா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க