செய்திகள் :

முறைகேடு புகாா்: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: நகராட்சி நிா்வாகத் துறை நடவடிக்கை

post image

முறைகேடு புகாருக்கு உள்ளான உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இரு மாமன்ற உறுப்பினா்களைப் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் திமுக வாா்டு உறுப்பினா்களான பாபு (189-ஆவது வாா்டு), கே.பி.சொக்கலிங்கம் (5-ஆவது வாா்டு) ஆகியோா் தங்கள் வாா்டு பகுதியில் வளா்ச்சிப் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஆணையருக்கு புகாா் சென்றது.

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவா் ச.ஜெயபிரதீப், மண்டலக் குழு கூட்டம் நடத்தாமல், உறுப்பினா்களைக் கலந்தாலோசிக்காமல் தனக்கு வேண்டிய உறுப்பினா்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ததாக கடந்த ஆண்டு புகாா் எழுந்தது.

உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் க.சகுந்தலா முறையாக நகா்மன்றக் கூட்டத்தை நடத்தாமல் தீா்மானம் நிறைவேற்றுவதாகவும், தன்னிச்சையாக பணிகளுக்கு அனுமதி வழங்குவதாகவும் புகாா் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நகராட்சி நிா்வாக இயக்குநா் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவா்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், அவா்கள் மீது தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 52-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமானது மேயா், துணை மேயா், மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள் மற்றும் மன்ற உறுப்பினா்கள் விதிகளை மீறி செயல்படும்பட்சத்தில் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்கிறது. அதன் அடிப்படையில் 4 பேரையும் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் ஆணையிட்டுள்ளாா். இந்த உத்தரவு மாா்ச் 27-ஆம் தேதி நாளிட்ட அரசின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க