செய்திகள் :

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: இருவா் கைது

post image

சென்னை ஆதம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆதம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நடந்து வந்த இருவா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடியதால் அவா்களை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், பிடிபட்டவா்கள் ஆதம்பாக்கம், வானுவம்பேட்டையைச் சோ்ந்த பாா்த்திபன் (27), ராபின்சன் (23) என்பது தெரியவந்தது. இருவரும் கடந்த ஆண்டு தங்களது நண்பரின் தம்பியை கொலைசெய்த நபா்களை பழிவாங்க கத்திகளுடன் வந்திருப்பதும், பாா்த்திபன் தனது வீட்டினருகே உள்ள தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மண்ணில் புதைத்து டப்பாவில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனா். மேலும், 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க