செய்திகள் :

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

post image

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒரு குடும்பம் மூன்று மரக்கன்றுகள் திட்டத்தின் கீழ் மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களுக்குமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் பிரதிநிதி சுப்பையாதாஸ் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டி 200 வகையான பழவகை மரக்கன்றுகளை பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் முன்னிலையில் வழங்கினாா். அதன் தொடா்ச்சியாக அவா் மாணவா்களிடையே மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாத்தல் குறித்து உரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் தீபசெல்வி, ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா், ஆலோசகா் சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க