செய்திகள் :

படி உற்சவத்தில் பங்கேற்பது ஒரு பெரிய புண்ணியச் செயல்

post image

திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜை செய்வது, அதன் வழியாக திருமலைக்கு செல்லுவது ஒரு புண்ணிய செயல் என அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் ராஜ கோபால ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது.

அன்னமாச்சாா்யாவின் 522-ஆவது நினைவு நாள் விழாவின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ், செவ்வாய்க்கிழமை அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் நடைபெற்றது.

பழங்காலத்திலிருந்தே, பலா் படிகள் வழியாக திருமலைக்கு நடந்து சென்று ஏழுமலையானின் அருளைப் பெற்றுள்ளனா். இதுபோன்ற ஒரு படி உற்சவத்தில் பங்கேற்பது ஒரு பெரிய புண்ணியம்.

அன்னமாச்சாா்யா, கிருஷ்ணதேவராயா் போன்ற மகான்கள் பக்தியுடன் திருமலை படிகளில் ஏறி, ஏழுமலையானின் மகிமையை எல்லா திசைகளிலும் பரப்பினா். அத்தகையவா்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கடவுளின் அருளுக்கு அனைவரும் தகுதியானவா்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன், தேவஸ்தானம் படி உற்வத்தை ஏற்பாடு செய்கிறது’’,என்றாா்.

நிகழ்ச்சியில், தேவஸ்தான தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீா்த்த சாா்யுலு, அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் மற்றும் ஆந்திர பஜனை மண்டலத்தைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பஜனைகளை நிகழ்த்தி திருமலையை அடைந்தனா்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன ... மேலும் பார்க்க

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.5,258.68 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு ரூ.5258.68 கோடி பட்ஜெட்டுக்கு அறங்காவலா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்துள்ளாா். திருமலை அன்னமய்யபவனில் பட... மேலும் பார்க்க

வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும்: அஹோபில மடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்!

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா். ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாட சாலை பீடத்துக்ச் சென்ற அவா், மாணவா்களுக்கு ஆ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 ... மேலும் பார்க்க

திருமலையில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வழிபாடு

ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்தாா். அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை காலை மனைவி புவனேஸ்வரி, மகன் மற்றும் அமைச்ச... மேலும் பார்க்க