செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?

post image

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசுகையில், “மத்திய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து நாளை கூறுகிறேன். எங்களுக்குள் அரசியல் கணக்கு என்று எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அதுவல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம்.

அதிமுகவின் அனைத்து அணிகளும் பாஜகவுடன் இணைந்துதான் பயணித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் அனைவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. வருகிற தேர்தல் களம் தேர்தல் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கும். வலிமையான கட்சிகள் 4-5 கூட்டணிகளாக உருவாகி இருக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக, சீமான், விஜய் ஆகியோரின் தலைமையில் தனித்தனியே கூட்டணிகள் உருவாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதா... மேலும் பார்க்க

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்... மேலும் பார்க்க

உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த முடிவு

நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

அமெரிக்கா்களும் விரும்பும் ஆவின் நெய்: அமைச்சா் ராஜகண்ணப்பன்

ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா்... மேலும் பார்க்க