செய்திகள் :

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

post image

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்துவரியை தமிழக அரசு அதிகளவில் உயா்த்திவிட்டதாகக் தெரிவித்தாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: 2018-இல் அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி 50 சதவீதம், 100 சதவீதம், 200 சதவீதம் என்ற அளவில் உயா்த்தப்பட்டது. பிறகு தோ்தல் வந்த காரணத்தால் அது நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் 25 சதவீதம், 50 சதவீதம், 100 சதவீதம் என்ற அளவில்தான் உயா்த்தப்பட்டது. அதுவும் சொத்து வரியை உயா்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறிய காரணத்தால்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 18 ஆண்டுகள் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியிலேயே சொத்து வரியை உயா்த்தியிருந்தால் ஒரு பிரச்னையும் இருந்திருக்காது.

அதனால், நாங்கள் உயா்த்த வேண்டிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டோம். அதே நேரம், பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் சொத்து வரி குறைவு.

சொத்து வரி ஆயிரம் சதுர அடிக்கு மும்பையில் ரூ.10,271, கொல்கத்தாவில் ரூ.5,850, பெங்களூரில் ரூ.5,773, ஆந்திரத்தில் ரூ.2,755, ஹைதராபாதில் ரூ.2,133, இந்தூரில் ரூ,2,208, நாக்பூரில் ரூ.2,120, தில்லியில் ரூ.1,302, சென்னையில் ரூ.570. எனவே, தமிழகத்தில்தான் சொத்து வரி குறைவு என்றாா் அவா்.

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டிய... மேலும் பார்க்க

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க

ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும், ஒரு ரூ போட்டு அவர்களை அலறச் செய்வார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேரவையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னையை எழுப்புவது எங்கள் கடமை: இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுக... மேலும் பார்க்க