செய்திகள் :

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

post image

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.

பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்பினா் அ.நல்லதம்பி எழுப்பிய வினாவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்: நேரடி கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தா், உதவுவோா், காவலாளி என மூன்று நிலைகளில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

அவா்களுக்கு ஊதியமாக மூட்டைக்கு ரூ.3.25 ஆக இருந்தது. இதனை மூட்டைக்கு ரூ.10 ஆக உயா்த்தியுள்ளோம்.

பட்டியல் எழுத்தா், உதவுவோருக்கு தினமும் ரூ.120-ம், காவலாளிக்கு ரூ.100-ம் பயணப் படியாகத் தருகிறோம். நகரப் பகுதிகளில் கட்டுநா்கள் இருக்கிறாா்கள்.

கிராமப் பகுதிகளில் இல்லாத குறை உள்ளது. இது தொடா்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். கட்டுநா் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்து... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டிய... மேலும் பார்க்க

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க