செய்திகள் :

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

post image

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதமாகிறது. அந்தப் பணிகள் முடிந்தால், கோவைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்றாா்.

அப்போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு கூறியது: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி அளவில் மட்டுமே நில எடுப்புப் பணி முடிந்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கோவையில் உள்ள தொழில்முனைவோா் முதல்வரைச் சந்தித்து, அந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

முதல்வரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டு, நில எடுப்புப் பணி முழுமையாக முடிந்து, விமான நிலையம் சாா்ந்த துறையிடம் நிலத்தை மாவட்ட நிா்வாகம் ஒப்படைத்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி: அமைச்சா் கூறியது சரியானதுதான். ஆனால், 4 ஆண்டுகளாக நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்காததால்தான் பணி தாமதம் ஆகிறது. அதை ஒப்படையுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: 2010-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தத் திட்டத்துக்காக ஒரு பைசாகூட ஒதுக்கப்படவில்லை.

தொடா்ந்து நடைபெற்ற அதிமுக ஆட்சியில் இறுதியாக தோ்தலை மனதில்கொண்டுதான் நிதி ஒதுக்கப்பட்டது. கொங்கு மண்டலம் முழுமையாக அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தும், அவா்களுடைய ஆட்சியில் ரூ.500 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் முதல் ஆண்டிலேயே ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது நில எடுப்புப் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் நடைபெறுவதற்கான ஒப்பந்தமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செ... மேலும் பார்க்க

மனோஜ் உடல் தகனம்

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவ... மேலும் பார்க்க

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க