செய்திகள் :

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

post image

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நிதி நாணயம் தரவறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015 ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.

தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024 - 25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன.

மேலும், இதே வளர்ச்சியுடன் முன்னேறினால், 2027 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 டிரில்லியன் டாலர் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 105 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தாலும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 76 சதவிகிதமாகவும், அமெரிக்கா 66 சதவிகிதமும், ஜெர்மனி 44 சதவிகிதமும், பிரான்ஸ் 38 சதவிகிதமும், இங்கிலாந்து 28 சதவிகிதம் மட்டுமே வளர்ந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா 30.3 டிரில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், சீனா 19.5 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளன. தற்போதைய வேகத்தில் ஒவ்வோர் ஒன்றரை வருடங்களுக்கும் இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலர்களை சேர்க்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வேகம் தொடர்ந்தால், 2032 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாடு 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். மேலும், இந்தியாவின் தற்போதைய வேகம் தொடர்ந்து முன்னேறினால், உலகின் முதல் 2 பொருளாதாரங்களும் வெகுதொலைவில் இல்லை.

இதையும் படிக்க:பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!

ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத... மேலும் பார்க்க

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மா... மேலும் பார்க்க

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க