செய்திகள் :

புகைப்பட பிரியர்களுக்கு... விவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!

post image

புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பதற்காகவே விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

முதலில் சீனாவிலும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்ய விவோ திட்டமிட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், எக்ஸ் 200 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எக்ஸ் 200 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க அதிக நாட்டமுடையவர்களை இலக்காக வைத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவில் எக்ஸ் 200 அல்ட்ராவை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 மினி ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே விவோ எக்ஸ் 200 அல்ட்ரா மட்டும் இல்லாமல், விவோ எக்ஸ் 200எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் விவோ திட்டமிட்டுள்ளது. இதனால் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வெளியீடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 200 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சாம்சங் நிறுவனத்தின் எச்பி-9 சென்சார் கொண்ட 200MP கேமராவுடன் வெளியாகிறது.

இதோடு மட்டுமின்றி சோனி நிறுவனத்தின் எல்.ஒய்.டி. - 818 (LYT-818) சென்சார் கொண்ட 50MP கேமராவும் உடன் உள்ளது. முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமராக்களுக்கு பெயர் பெற்ற இரு நிறுவனங்களின் சென்சார்கள் உள்ளதால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுப்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

நீண்ட நேரம் விடியோ எடுக்கும் வகையில் 6000mAh திறன் கொண்ட பேட்டரியும் 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் விவோ எக்ஸ் 200 அல்ட்ரா எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை விவோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்

ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க