செய்திகள் :

யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

post image

ஹரியாணாவில் 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா ரோட்டாக் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்த யோகா ஆசிரியர் ஜக்தீப் (45). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் சென்ற பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் முக்கியக் குற்றவாளி ராஜ்கரண் என்பவரின் கூட்டாளிகள் இருவரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது.

ராஜ்கரணுக்கு சொந்தமான வீட்டில் ஜக்தீப் முன்பு வாடகைக்கு தங்கியிருந்தார். அப்போது, ராஜ்கரணின் மனைவியுடன் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருப்பதைக் ராஜ்கரண் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், கோபம்கொண்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் ஜக்தீப்பை ஆட்கள் வைத்து கடத்தினார். ஜக்தீப்பின் வாய், கை, கால்களை கயிற்றால் கட்டி ’சர்க்கி தத்ரி’ என்ற பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்றனர்.

அங்கு ஆள்நடமாட்டமில்லாத மணல் பகுதியில் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி அவரை உயிருடன் புதைத்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ராஜ்கரண் உள்பட 4 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கைதான குற்றவாளிகள் கொடுத்தத் தகவலின்படி காவல்துறையினர் ஜக்தீப்பை புதைத்த இடத்துக்குச் சென்று நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை தோண்டியெடுத்தனர்.

தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ராஜ்கரணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க | சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடையா? பஞ்சாப் அரசு ஆலோசனை!

ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத... மேலும் பார்க்க

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மா... மேலும் பார்க்க

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க