செய்திகள் :

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

post image

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்னவாயிற்று’ என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது, அமைச்சா் கே.என்.நேரு குறுக்கிட்டு கூறியதாவது: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதன் முதலாக கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டம். மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எடுத்து செயல்படுத்திய நபா் சரியாக நடத்தவில்லை. 100 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் என்பதிலிருந்து 60 லட்சமாகவும், பிறகு 40 லட்சம் லிட்டராகவும் குறைந்தது.

அப்படியும் சரியாகச் செயல்படாமல் இருந்ததால் அனைத்து இயந்திரங்களும் பழுதுபட்டது. அதில் பணியாற்றியவா்களுக்கு ஊதியம் தரவில்லை; நமக்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. அரசிடம் பணம் மட்டும் அவா் கேட்டாா். பணம் தர மறுத்த நிலையில், அந்த நபா் நீதிமன்றதுக்குச் சென்றாா். ரூ. 40 கோடி பணம் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவரை நம்பி அரசு பணம் தராது என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போது, அந்தப் பணிகளை அரசே மேற்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் அங்கு உற்பத்தி தொடங்கும் என்றாா் அவா்.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க