செய்திகள் :

இங்கிலாந்து அணியின் கேப்டனாக விரும்புகிறாரா பென் டக்கெட்?

post image

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியதற்கு பிறகு, அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அடுத்த கேப்டனுக்கான தேடலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

கேப்டனாக விரும்பும் பென் டக்கெட்

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு காலியாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவது கண்டிப்பாக எனது கனவாக இருக்கும். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பினை இலக்காக கொண்டு செயல்படுவதாக நினைக்கவில்லை. ஆனால், கேப்டன் பொறுப்புக்கான கேள்விக்கு எதற்காக பதிலளிக்கிறேன் எனத் தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது, இங்கிலாந்து அணிக்காக ஒரு வீரராக அணியில் விளையாடுவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இதையும் படிக்க: உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

4 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன் என நினைத்திருக்க மாட்டேன். ஆனால், இன்று இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது நாட்டுக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட் சிறப்பாக விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 227 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்லை!

பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்டனர், ஐ... மேலும் பார்க்க

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எலைட் நடுவர்கள் விவரத்தை அற... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்: யாரெல்லாம் இடம்பிடித்துள்ளனர்?

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ ப... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு தந்தையானார் கேஎல் ராகுல்!

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவர், தம் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து... மேலும் பார்க்க

கோலிக்கும் எனக்கும் சீனியர் - ஜூனியர் உறவு! மனம் திறந்த தோனி

விராட் கோலியும் தோனியும் எப்படி பழகுவார்கள் பேசுவார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை(மார்ச் 22) தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

ஆட்டத்தின்போது தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் க... மேலும் பார்க்க