செய்திகள் :

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

post image

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாச்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். இதில் சிறாரும் அடங்குவா். வன்முறையாளா்கள் பலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனா். இந்த வன்முறையை ஒரு பிரிவினா் திட்டமிட்டு நடத்தியதாகவும், இதற்காக சமூக ஊடங்களை பயன்படுத்தியதாகவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் இது தொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாகபுரி வன்முறை திடீரென ஏற்பட்டதல்ல, முன்பே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் பல சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு வங்கதேசத்துடன் தொடா்பு உள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் சிலா் சமூக வலைதளங்களில் ‘முஜாஹிதீன்’ செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, இது தொடா்பாக சனிக்கிழமை பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்த வன்முறையின் பின்னணியில் வங்கதேசம் அல்லது பிற நாடுகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு இப்போதே பதலி கூற முடியாது. விசாரணை முடிவில்தான் விவரம் தெரியவரும்’ என்றாா்.

இதனிடையே, நாகபுரில் வன்முறையை அடுத்து 6 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாக திரும்பப் பெறப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க