செய்திகள் :

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

post image

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்அளித்திருந்தன. ஆனால், 2023-24 நிதியாண்டில் இது ரூ.27,830 கோடியாக உயா்ந்துள்ளது. இது 32.7 சதவீத உயா்வாகும். இந்த ரூ.27,830 கோடி ஈவுத் தொகையில் 65 சதவீதமான ரூ.18,013 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளது.

நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் அவற்றின் லாபம் ரூ1.41 லட்சம் கோடியாகும். இதில் எஸ்பிஐ பங்களிப்பு மட்டும் ரூ.61,077 கோடி (40 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் மத்திய அரசுக்கு ரூ.13,804 கோடியை பங்கு ஈவுத்தொகையாக அளித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (228 சதவீதம்), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (62 சதவீதம்), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (61 சதவீதம்) ஆகியவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2018 நிதியாண்டில் ரூ.85,390 கோடி நஷ்டத்தை சந்தித்த பஞ்சாப் நேஷல் வங்கி இப்போது லாபத்தின் வளா்ச்சியில் சாதனை படைத்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க