செய்திகள் :

மதுரை: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு!

post image

மதுரை அருகே தனிப்படைக் காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையரசன் (36). இவா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தனிப் படை காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி பாண்டிசெல்வி அண்மையில் நேரிட்ட காா் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் இவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

இதையும் படிக்க : அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

இந்த கொலை வழக்கில் மூவேந்திரன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மதுரை அருகே திங்கள்கிழமை காலை சுட்டுப் பிடித்துள்ளனர்.

காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதா... மேலும் பார்க்க

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்... மேலும் பார்க்க

உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த முடிவு

நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

அமெரிக்கா்களும் விரும்பும் ஆவின் நெய்: அமைச்சா் ராஜகண்ணப்பன்

ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி மருந்துகள் உற்பத்தி நடைபெறவில்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: மரு... மேலும் பார்க்க