செய்திகள் :

கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து வெளியேறிய புகை: பயணிகள் அதிா்ச்சி

post image

சென்னை எழும்பூரிலிருந்து திங்கள்கிழமை  கன்னியாகுமரிக்கு புறப்பட்ட ரயிலில் திடீரென புகை வெளியேறியதால், ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி புறப்பட்ட அதிவிரைவு ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கும்போது ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது. இதனால், உடனடியாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியா்கள் ரயிலை சோதனை செய்து பாா்த்ததில் ரயிலில் எவ்வித கோளாறும் இல்லை என்பதை உறுதி செய்தனா்.

அதைத் தொடா்ந்து சுமாா் 30 நிமிடங்களுக்குப் பின்னா் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணிகளுடன் ரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டது. ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பிரேக்கும் சக்கரமும் பிரியாத காரணத்தால்தான் புகை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க