செய்திகள் :

தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

post image

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி மருந்துகள் உற்பத்தி நடைபெறவில்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் போலி மருந்துகள் எதுவும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது கண்டறியப்படவில்லை. கடந்த ஆண்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி மருந்தும் வேறு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.

இன்னொருபுறம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை உற்பத்தி செய்த 74 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடா்பாக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டிய... மேலும் பார்க்க

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க

ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும், ஒரு ரூ போட்டு அவர்களை அலறச் செய்வார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேரவையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னையை எழுப்புவது எங்கள் கடமை: இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுக... மேலும் பார்க்க