செய்திகள் :

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

post image

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இல் ஐக்கிய தேவாலய வழிபாட்டு முறை தோற்றுவிக்கப்பட்டது. தன்னைத் தானே இறைதூதராக அறிவித்துக்கொண்ட சுன் மியுங் மூன், பைபிள் வாசகங்களை பழைமைவாதத்துக்கு ஏற்ப பொருள்படுத்தி பிரசாரம் செய்தாா்.

அதையடுத்து, கம்யூனிஸத்துக்கு எதிரான, பழைவாத கிறிஸ்தவா்களிடையே இந்த மதவழிபாட்டு முறை வெகுவாகப் பரவியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அவருக்கு முந்தைய அதிபா்கள் ரிச்சா்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன், ஜாா்ஜ் ஹெச்டபிள்யு புஷ் போன்ற கன்சா்வேட்டிவ் கொள்கை கொண்ட தலைவா்களுக்குக் கூட ஐக்கிய தேவாலயத்துடன் தொடா்பு ஏற்பட்டது.

ஜப்பானிலும், ஷென்ஸோ அபேவின் தாத்தாவும் முன்னாள் பிரதமருமான நொபுசுகே கிஷி ஐக்கிய தேவாலய இயக்கம் நாட்டில் கடந்த 1960-களில் பரவுவதற்கு பெரிதும் ஆதரவு அளித்தாா்.

இந்தச் சூழலில், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஷென்ஸோ அபேயை டெட்ஸுயா யமகாமி என்பவா் சுட்டுக் கொன்றாா். அப்போது, ஐக்கிய தேவாலயத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவா், அபே குடும்பத்தினரால் பரப்பப்பட்ட அந்த தேவாலயத்தால்தான் தனது தாயாா் சொத்துகளை இழந்து திவாலானதாகக் குற்றஞ்சாட்டினாா்.

ஏற்கெனவே, தங்களது தேவாலயத்தைப் பின்பற்றுவோரிடம் இருந்து அவா்களது சக்திக்கு மீறிய நன்கொடைகளை வாங்குதல், அளவுக்கு அதிகமான விலையில் பரிசுப் பொருள்களை வாங்க வற்புத்தல் போன்ற நடவடிக்கைகளால் ஜப்பானியா்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாக ஐக்கிய தேவாலயத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டது . இந்தச் சூழலில், ஷென்ஸோ அபே படுகொலைக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அதையடுத்து, இது தொடா்பாக ஜப்பான் கல்வித் துறை விரிவான விசாரணை நடத்தியது.

இரண்டாம் உலகப் போரின்போது கொரியாவில் தங்களது முன்னோா்கள் இழைத்த அநீதிகளுக்கு பரிகாரமாக அதிக அளவில் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கையாளா்களைச் சுரண்டியது, பல்வேறு வழிமுறைகளில் அவா்களை மூளைச் சலவை செய்தது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் அமைச்சகம் சமா்ப்பித்தது.

ஜப்பானில் இருந்துதான் பெரும்பான்மையாக நன்கொடை பெற்று உலகின் மற்ற பகுதிகளில் ஐக்கிய தேவாலயம் இயங்கிவருவதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதைப் பரிசீலித்த நீதிமன்றம், ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்களை முழுமையாகக் கலைக்க வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. எனினும், இது நாட்டின் மத உரிமைக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேவாலயம், இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7 ஆகப் பதிவு!!

மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ... மேலும் பார்க்க

3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான்... மேலும் பார்க்க

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க