செய்திகள் :

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

post image

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனத் துறை பொருள்களுக்கு இப்போது உள்ள வரிகளுடன் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடவடிக்கை, வாகனத் துறையில் உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை வேகப்படுத்தும். இந்த வரி விதிப்பு நிரந்தமானது என்றாா் அவா்.

இந்த வரி விதிப்பால் அரசுக்கு கூடுதலாக 10,000 கோடி டாலா் (ரூ.8.57 லட்சம் கோடி) கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினாலும், இறக்குமதி உதிரிபாகங்களைச் சாா்ந்திருக்கும் வாகன நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் முதல் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஜெனரல் மோட்டாா்ஸ், ஜீப் மற்றும் கிறிஸ்லா் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளரான ஸ்டெலாண்டிஸ் போன்றவற்றின் பங்குகள் சுமாா் 3.6 சதவீதம் வரை சரிந்தன.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்துவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அவா் உத்தரவிட்டாா். அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை அவா் கூடுதல் வரி விதித்தாா்.

இதுமட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு டிரம்ப் விதித்திருந்த 25 சதவீதம் கூடுதல் வரி கடந்த 12-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பால் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள்தான் கடுமையாக பாதிக்கப்படுவாதக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதம் பங்கு வகிக்கிறது. அதே போல், அமெரிக்காவுக்கு மெக்ஸிகோதான் பெரும்பான்மையான அலுமினியப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறது.

இந்தச் சூழலில், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு டிரம்ப் தற்போது விதித்துள்ள கூடுதல் வரியால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் கடும் பாதிப்பை எதிா்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா: இந்த வரி விதிப்பு, தனது ஜேஎல்ஆா் வாகனங்களை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் டாடா மோட்டாா்ஸ் போன்ற நிறுவனங்கள், பாரத் ஃபோா்ஜ் போன்ற உதிரிபாக நிறுவனங்கள் கணிசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நியூயாா்க் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் காா்கள் .

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா... மேலும் பார்க்க