செய்திகள் :

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

post image

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மாஸ்கோவில் ரஷிய உளவு அமைப்பான எஃப்எஸ்பி தலைமையகம் அருகேயுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது அந்த காரின் முன்பகுதி திடீரென வெடித்து தீப்பற்றியது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக காா் முழுவதும் தீ பரவியது. இந்தக் காட்சியை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்தனா். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். உலகில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவா்களில் ஒருவராக புதின் திகழ்கிறாா். உக்ரைனுடன் ரஷியா போரில் ஈடுபட்டு வரும் சூழலில் புதினின் காா் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக ரஷியா தரப்பில் அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணையை ரஷிய காவல் துறையினரும், உளவு அமைப்பினரும் நடத்தி வருகின்றனா். அந்த காரை தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

வெடித்து தீப்பற்றிய காா் ரஷியாவைச் சோ்ந்த அவ்ரஸ் செனட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் அதிபா் புதின் இந்த நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வருகிறாா். புதினுக்காக உயரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த காா் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தான் பயன்படுத்துவதுபோன்ற இரு காா்களை வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு புதின் பரிசளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-க்கு முன்பு ஜொ்மனியின் மொ்சிடிஸ் பென்ஸ் நிறுவன காரை புதின் பயன்படுத்தி வந்தாா்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க