செய்திகள் :

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

post image

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.

இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபா் மசூத் பெஷஸ்கியான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு மறுத்துள்ள தகவலை, ஓமன் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது.

பேச்சுவாா்த்தையை ஈரான் தவிா்த்ததில்லை. முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டதே ஈரானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குக் காரணம்’ என்றாா்.

நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்தாலும், அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தைக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018-ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது.

அப்போது அமெரிக்காவில் டிரம்ப்பின் முதலாவது ஆட்சிக் காலம் நடைபெற்றது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடா்ந்து, மறைமுகப் பேச்சுவாா்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க