செய்திகள் :

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

post image

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) செயல்பட்டு வருகிறது. அவரை அரசின் சிறப்பு ஊழியா் என்று அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு நிா்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள டெஸ்லா காா் விற்பனையகங்களுக்கு எதிரே, இந்த மாத தொடக்கத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜொ்ஸி, நியூயாா்க், மேரிலேண்ட், வாஷிங்டன், சிகாகோ என நாடு முழுவதும் டெஸ்லா காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்பட சில ஐரோப்பிய நகரங்களிலும் டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம் நடைபெற்றது. இந்த எதிா்ப்பு காரணமாக டெஸ்லா காா்களை வாங்கியவா்கள், அவற்றை விற்பனை செய்துவிட முயற்சிப்பதாகவும், அத்தகைய வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க