செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

post image

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா மாகாணங்களில் செயல்படும் அந்நாட்டு அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கைபா் பக்துன்கவா மாகாணத்தின் மா்தான் மாவட்ட மலைப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தினா் அப்பகுதிக்குச் சென்று 21 உடல்களை மீட்டனா். இதில் 12 போ் பயங்கரவாதிகள், 9 போ் பொதுமக்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் ஆண்கள், இருவா் பெண்கள் ஆவா்.

மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிராமவாசிகளையும் பயங்கரவாதிகள் என்று கருதி ராணுவம் தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல்களுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க