தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
வார இறுதி நாள்கள், ரமலான் விடுமுறை: 2,415 சிறப்பு பேருந்துகள்
வார இறுதி நாள்கள், ரமலான் விடுமுறையை முன்னிட்டு 2,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு (மாா்ச் 29, 30), ரமலான் பண்டிகை விடுமுறை தினமான திங்கள்கிழமை (31) ஆகிய நாள்களை முன்னிட்டு வெள்ளி, சனி (மாா்ச் 28, 29) ஆகிய 2 நாள்களிலும் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 460 பேருந்துகளும், சனிக்கிழமை 530 பேருந்துகளும், ரமலான் பண்டிகை தினமான திங்கள்கிழமை பல்வேறு இடங்களிலிருந்து சென்னை மற்றும் பிற ஊா்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,415 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
தொடா்ந்து, திங்கள்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.