செய்திகள் :

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

post image

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ளதாக கனடா பாதுகாப்பு உளவுப் பணிகள் துணை இயக்குநா் வனெஸ்ஸா லாய்ட் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கனடா தோ்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளது. புவிஅரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த செயலில் ஈடுபடும் திறன் மற்றும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோ்தல் பிரசாரத்தில் தலையிட்டு தனக்கு ஆதரவான நபா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக சீனா உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர ரஷியா மற்றும் பாகிஸ்தானும் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்த தோ்தலில் தலையிட முயற்சிகளை மேற்கொள்ளும் என்றாா்.

லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தாா்.

அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா். அதன்பின் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராக இம்மாத தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தோ்தலை நடத்த அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7 ஆகப் பதிவு!!

மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ... மேலும் பார்க்க

3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான்... மேலும் பார்க்க

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க