செய்திகள் :

அமெரிக்காவில் பிரபலமாகும் `வாடகை கோழி சேவை' - என்ன காரணம் தெரியுமா?

post image

அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பது என்பது பிரபலமாகி வருகிறது. ஏன் மக்கள் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

முட்டைகளின் விலை அளவுக்கு அதிகமாகி வருவதைத் தடுப்பதற்காக சில அமெரிக்க நிறுவனங்கள் மக்கள் தங்களது வீடுகளில் கோழிகளை வளர்க்க வலியுறுத்துகிறது.

பிப்ரவரி 2022 ஆண்டு கோழிப் பண்ணைகளில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து 166 பில்லியன் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன.

egg

அப்போது முட்டையின் விலை சராசரியாக 1.93 டாலராக இருந்தது. ஆனால் ஜனவரி 2023 இல் அது இரு மடங்குகளாக அதிகரித்து 4.82 டாலராக உயர்ந்துள்ளது.

தற்போது சிகாகோ, நியூயார்க் மற்றும் சான் பிரான்சி கோ போன்ற நாட்டின் சில பகுதிகளில் முட்டைகளின் சில்லறை விலை $4.95 முதல் $10 வரையிலும் அல்லது அதற்கு மேலும் உள்ளது.

இதனைத் தடுக்க அமெரிக்கா வேளாண் துறை சில யுத்திகளை வழங்கியது. இதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண நிதியும், தடுப்பூசி ஆராய்ச்சிக்காக சில நிதியையும் ஒதுக்கியது.

இருப்பினும் முட்டையின் விலை 41% அதிகமாக இருந்தது. அதன் நிலை மாற இன்னும் மூன்று நாள்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நெருக்கடியை தடுக்க சில நிறுவனங்கள் கோழிகளை வாடகைக்குவிட முடிவு செய்தது.

கோழிகள்

கோழிகளைப் பராமரிப்பதற்கான புத்தகம், அதற்கான பயிற்சி, தீவனம் போன்றவை குறித்துத் தொலைபேசித் தகவல்களும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான கோழி வாரத்திற்கு ஐந்து முட்டை வரை இடும் இதனால் இந்த நெருக்கடி குறையும் என்று மக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து மக்கள் கூறுகையில், இது ஒரு நீண்ட கால பராமரிப்பு இல்லை என்றும் குறுகிய காலத்தில், இதுபோன்ற சேவைகளை தங்களால் அணுக முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். கோழி வளர்ப்பு என்பது குறைந்த பராமரிப்பு என்பதாலும் மக்கள் இதனை விரும்பி செய்வதாகவும் கூறுகின்றனர்.

Amul: "நெய், தயிரைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாட்டில் பால் விற்பனை" - அமுல் நிறுவன எம்.டி பேட்டி

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2025, திருச்சி மாநகரில் உள்ள கலையரங்கத்தில் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக் மற்... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

வாசக விவசாயிகளே!விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது... மேலும் பார்க்க

திருச்சி: பசுமை விகடன் Agri Expo; 80 அரங்குகள்; கருத்தரங்கங்கள்... மாபெரும் வேளாண் கண்காட்சி!

பசுமை விகடன் நடத்தும் வேளாண் கண்காட்சி திருச்சி கலையரங்கத்தில் மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இல்லத்தரசிகள், வேளா... மேலும் பார்க்க

Ooty: ஆங்கிலக் கவிஞர்களின் மனங்கவர்ந்த மஞ்சள் நிற டஃபோடில்ஸ்! - முதன் முறையாக ஊட்டியில் அறிமுகம்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஹாலந்து நாட்டு துலிப் மலர்கள் முதல் 'குயின் ஆஃப் சைனா' என வர்ணிக்கப்படும் பவுலேனிய பூக்கள் வரை நூற்றுக்கணக்கான மலர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "21 டிகிரியில் விளையும் ஆப்பிள் இனி 43 டிகிரியிலும் விளையும்" - இளம் பொறியாளர் அசத்தல்

மகாராஷ்டிராவில் ஐ.டி பிரிவில் பொறியியல் பட்டம் படித்த பிறகு சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சென்று நவீன முறையில் விவசாயம் செய்து வருகிறார் விக்ராந்த் காலே. தனது ஐ.டி படிப்பை விவசாயத்தில் பயன... மேலும் பார்க்க

`கரன்ட்; கடன்; விலை?'- நாராயணசாமி நாயுடுவின் நிறைவேறாத கனவு;நிறைவேற்றுமா அரசு?

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள்.கோயம்புத்தூரை அடுத்த வையம்பாளையத்தில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க