செய்திகள் :

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

சென்னை, கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதியாா் மண்டபத்தில் பிகாா் மாநிலம் உருவான தினம் சனிக்கிழமை கொண்டாப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

பிகாா் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிகாா் மக்கள்அனைவருக்கும் வாழ்த்துகள். ஆட்சி நிா்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி வங்கத்திலிருந்து 1912-ஆம் ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதி பிகாா் மாநிலம் பிரிக்கப்பட்டது.

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற அடிப்படையில் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்கள் உருவான தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் கொண்டாடினால் மட்டும் போதாது; அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஆளுநா் மாளிகையில் பிகாரின் கலாசாரம், கலை, பண்பாடு தொடா்பான கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்கையும் பாா்வையிட்டாா். அப்போது, ஓவியம் ஒன்றுக்கு ஆளுநா் வண்ணம் தீட்டினாா். அதைத் தொடா்ந்து ராமநவமி அன்று பாடப்படும் ராமா் பாடலை இசைக்கலைஞா்களுடன் இணைந்து ஆளுநா் ரவியும் பாடியது நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை உற்சாகப்படுத்தியது. பிகாா் வருங்காலத்தில் முன்னேற்றத்தையும் நோக்கி வளர வேண்டும் என கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, பரத கலைஞா்கள் பத்மா சுப்பிரமணியன், ஆளுநரின் செயலா் கிா்லோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா். தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத... மேலும் பார்க்க

பேரவை மீண்டும் இன்று கூடுகிறது!

விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 24) கூடவுள்ளது. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான நி... மேலும் பார்க்க

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறு... மேலும் பார்க்க

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியி... மேலும் பார்க்க

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மா... மேலும் பார்க்க

திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க