செய்திகள் :

கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி

post image

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், உழவர் சந்தை அருகே அந்தக் காரை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த அன்புசெல்வன் (வயது 43) என்பவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. பி.டெக் பட்டதாரியான அவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காவல்துறையின் கேள்விக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.

மது போதை

குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் காரில் இருந்து காவல்துறையினர் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

அப்போது அவர், ‘இது ஏர்கன்’ என்று கூறியுள்ளார். அது உண்மையிலும் ஏர்கன் தானா என்று கண்டறிய துப்பாக்கி கோவை ஆயுத தொழிற்சாலை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து குடிபோதையில் அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக காவல்துறை

“துப்பாக்கி குறித்து தெரியவரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க

`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'

பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட... மேலும் பார்க்க

காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டதற்கு என்ன காரணம்? - சிபிசிஐடி-க்கு வழக்கு மாறிய பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதர மூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவரின் அம்மா கமலா. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவ... மேலும் பார்க்க