செய்திகள் :

காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒரு இடத்தில் துப்பாக்கி காயத்துடன் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் நிலைமை மோசம் அடைந்ததால், அங்கிருந்து மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவுரையாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவ்வளவு முயற்சி செய்தும் அவர் இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திலிப்பை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோது இக்கொலையில் திலிப் மனைவிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. திலிப் மனைவி பிரகதியை பிடித்து விசாரித்தபோது, பிரகதி திருமணத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அனுராக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதலுக்கு பிரகதியின் பெற்றோர் சம்மதிக்காமல் அவரை திலிப்பிற்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிரகதியும், அனுராக்கும் சேர்ந்து திலிப்பை கொலை செய்ய முடிவு செய்து ராம்ஜி என்ற கூலியாளை இதற்காக நியமித்தனர். இக்கொலைக்காக ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ராம்ஜி தனது அடியாட்களுடன் திலிப்பை பைக்கில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளார் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரகதி மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க

`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'

பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டதற்கு என்ன காரணம்? - சிபிசிஐடி-க்கு வழக்கு மாறிய பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதர மூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவரின் அம்மா கமலா. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து - பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவி ஓடிசென்று ஏறிய கொடுமை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவி ஒருவர் தனது கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில... மேலும் பார்க்க