பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'
பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் லோக்நாத் சிங் (37) என்று தெரிய வந்தது. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி லோக்நாத் சிங்கின் மனைவி யஷ்வினி மற்றும் அவரது தாயார் ஹேமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சைதுல் கூறுகையில்,' 'லோக்நாத்தும் யஷ்வினியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களது திருமணத்திற்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தான் யஷ்வினியின் பெற்றோருக்கு அவரது திருமணம் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆனால் லோக்நாத்திற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது யஷ்வினிக்கு தெரிய வந்தது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். அதோடு லோக்நாத் சில சட்டவிரோத தொழில்களையும் செய்து வந்தது யஷ்வினிக்கு தெரிய வந்தது.
லோக்நாத் தனது மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். லோக்நாத் தனது சகோதரியிடம் சொல்லிவிட்டு யஷ்வினி வீட்டிற்கு காரில் புறப்பட்டார். யஷ்வினியும், அவரது தாயாரும் சேர்ந்து வீட்டில் உணவு தயாரித்தனர். அதில் தூக்க மாத்திரையை கலந்தனர். லோக்நாத் வரும்போதே பீர் பாட்டில்களை அதிக அளவு வாங்கி வந்திருந்தார். அவர் தனது மனைவி யஷ்வினியை அழைத்துக்கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.
காரில் இருக்கும்போது லோக்நாத் அதிக அளவில் மது அருந்தி இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தூக்க மாத்திரை கலந்த சாப்பாட்டை அதிக அளவில் லோக்நாத் சாப்பிட கொடுத்துள்ளார் யஷ்வினி. அதனை சாப்பிட்ட உடன் லோக்நாத்திற்கு தூக்கம் வர ஆரம்பித்தது. உடனே யஷ்வினி தனது தாயாருக்கு இருவரும் இருக்கும் இடம் தொடர்பான தகவலை அனுப்பி இருக்கிறார். அவரது தாயார் ஹேமா கத்தியுடன் வந்தார். ஹேமா லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். உடனே லோக்நாத் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க 150 மீட்டர் தூரத்திற்கு ஓடினார். அவர் தனது காருக்கு பின்புறம் மறைந்து கொள்ள முயன்றார். அவரை கத்தியால் குத்திய தாயும், மகளும் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் லோக்நாத் காரில் இறந்து கிடப்பதை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்'' என்றார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரித்தபோது, லோக்நாத் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து யஷ்வினி குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்தே யஷ்வினி அவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் யஷ்வினியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.
தாயார் வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து அங்கு வந்து மிரட்டிக்கொண்டிருந்தார். தன்னுடன் வந்து வாழவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். அதன் பிறகுதான் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண லோக்நாத்தை கொலை செய்ய தாயும் மகளும் சேர்ந்து முடிவு செய்தது தெரிய வந்துள்ளது.