செய்திகள் :

விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு- மத்திய அமைச்சா் தகவல்

post image

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

சிறு,குறு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிஎம் கிஸான் என்ற பெயரில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இதில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000 மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

பெரிய விவசாயிகள், மத்திய, மாநில அரசுப் பணியில் இருப்போா், மாதம் ரூ.10,000-க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோா், வருமான வரி செலுத்துவோா், மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்பவா்கள், அரசமைப்புச் சட்ட பதவிகளை வகிப்பவா்கள் உள்ளிட்டோா் இத்திட்டத்தில் இணைய முடியாது. எனினும், சிலா் இத்திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலனடைந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது:

இத்திட்டம் தொடக்கத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. பயனாளா்கள் தாங்களாகவே முன்வந்து நிதி உதவிக்கு பதிவு செய்ய முடியும். இத்திட்டத்தில் இணைய ஆதாா் தேவையில்லை என்ற சலுகையும் அளிக்கப்பட்டது.

ஆனால், இதில் சில தவறுகள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு மனுதாரா்களின் ஆதாா், வருமான வரித்துறை விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. விவசாய நில ஆவணம் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் போலியாக இத்திட்டத்தில் பலனடைந்தவா்கள் நீக்கப்பட்டனா்.

இதுவரை 19 தவணைகளாக ரூ.3.68 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகுதி இல்லாமல் இத்திட்டத்தில் பயனடைந்து வந்தவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றாா்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க