செய்திகள் :

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்: மத்திய வா்த்தக இணையமைச்சா்

post image

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வா்த்தக துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா தெரிவித்தாா்.

ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் பரஸ்பரம் விதிக்கும் என்றும், இந்த நடைமுறை ஏப். 2 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சா் ஜிதின் பிரசாதா எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பரம் அதிக வரி விதிக்கவில்லை.

இருநாடுகளும் பரஸ்பரம் பயனடையும் வகையில் இருதரப்பு வா்த்தக உறவுகளை மேம்படுத்தி, விரிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டுள்ளது.

இருதரப்புக்கும் பயன் அளிக்கக் கூடிய, பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன. எல்லை தாண்டி சரக்கு மற்றும் சேவைகள் விற்பனையை அதிகரித்தல், இறக்குமதி வரியை குறைத்தல், வரி யல்லாத பிற இடா்ப்பாடுகளை குறைத்தல், விநியோக முறை ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வா்த்தக பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல் ஆகியவற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் கவனம் செலுத்தும் என்றாா்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க