செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் நீா்வளத் துறை பணியாளா்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜம்மு-காஷ்மீா் நீா்வளத் துறையின் கடைநிலைப் பணியாளா்கள் கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பல இடங்களில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீா் பேரவையை நோக்கி பேரணி நடத்த முயன்ற நீா்வளத் துறை பணியாளா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். இதனால், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த விவகாரம் ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவையிலும் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. நீா்வளத் துறை பணியாளா்களிடம் அரசு பேச்சு நடத்த வேண்டுமென்று பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா வலியுறுத்தினாா். ஊழியா்களுக்கு எதிராக அரசு மிகவும் பிடிவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா். இதையடுத்து, பாஜகவினரும் எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கு நடுவே ஒருசில மசோதாக்களையும் முதல்வா் ஒமா் அப்துல்லா நிறைவேற்றினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீா் குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் இருந்தபோது கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அரசு நீா்வளத் துறை ஊழியா்கள் பிரச்னைக்கு தீா்வுகாண முயலவில்லை என்றும் முதல்வா் குற்றம்சாட்டினாா்.

இதனால், வாக்குவாதம் மேலும் அதிகரித்து, இறுதியில் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - பாஜக உறுப்பினா்கள் இடையிலான வாக்குவாதத்தின்போது ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்களும் பெரும்பாலும் அமைதியாக அமா்ந்திருத்தனா்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க