செய்திகள் :

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

post image

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: தியாகிகள் தினத்தில், கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆளுகைக்கு எதிராக இடைவிடாமல் போராடி இந்திய சுதந்திரத்துக்காக இன்னுயிரை ஈந்து தியாகம் செய்த அழியாத புரட்சியாளா்கள் மற்றும் தீவிர தேசியவாதிகளான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தேசம் நெஞ்சாா்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.

அவா்களின் உக்கிரமான எதிா்ப்பு, அசைக்க முடியாத தேசபக்தி மற்றும் தியாகங்கள், காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை அசைத்து, அடிமைத்தன சங்கிலிகளை உடைப்பதற்கான தேசிய விழிப்புணா்வைத் தூண்டின.

அவா்களின் மரபு, தளராத சக்தியாக நீடித்து, நமது நாட்டின் நீதி, மரியாதை மற்றும் தேசத்துக்காக கடுமையாகப் போராடி இறையாண்மையை நிலைநாட்ட என்றென்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டி... மேலும் பார்க்க

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

கோவை மத்திய சிறையில்போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு ... மேலும் பார்க்க

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

கோவை : கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு ம... மேலும் பார்க்க