செய்திகள் :

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

post image

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தில்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை, தில்லியில் திறக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தில்லி புஷ்ப் விஹாரில் அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!

தமிழக அரசியலில் பரபரப்பு

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில், மும்முனைப் போட்டி நிலவியது. இதன்விளைவாக திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.

சமீபகாலமாக பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரைஒருவர் பெரிதளவில் விமர்சிக்காமல் திமுகவுக்கு எதிராக கருத்துகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திடீர் பயணமாக முன்னறிவிப்பு இன்று தில்லிக்கு எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டது தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் இன்று மாலை தில்லி செல்லவுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று நேரத்துக்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தில்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!

மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, மின் துறை தொடா்பான துணைக் கேள்வியை அதிமுக... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசைப் போன்றே, தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு உள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகு... மேலும் பார்க்க

வெப்ப வாத பாதிப்புகளுக்கு மருத்துவ உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தல்

வெப்ப வாத பாதிப்புகளுக்கு 104 அல்லது 108 அவசர உதவி எண்களை அழைக்கலாம் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. இதன் காரணமாக... மேலும் பார்க்க

தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, நேரமில்லாத நேரத்தில் மொழிக் கொள்கை விவகாரம... மேலும் பார்க்க

ராமநாதபுரம், பெரம்பலூரை மாநகராட்சியாக்க ஆலோசனை: கே.என்.நேரு

ராமநாதபுரம், பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். பேரவையில் செவ்... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்பு குறிக்குள்): அ... மேலும் பார்க்க