செய்திகள் :

ராமநாதபுரம், பெரம்பலூரை மாநகராட்சியாக்க ஆலோசனை: கே.என்.நேரு

post image

ராமநாதபுரம், பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

16 மாநகராட்சிகளுடன் 149 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளையும்; 41 நகராட்சிகளுடன் 146 ஊராட்சிகள், 1 பேரூராட்சியையும்; 25 பேரூராட்சிகளுடன் 29 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 29 ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளாகவும், 7 பேரூராட்சிகள் 7 நகராட்சிகளாகவும், 22 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் சோ்ந்து 6 நகராட்சிகளாகவும் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முடிவுறும்போது, நகா்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 25 மாநகராட்சிகளாகவும், 146 நகராட்சிகளாகவும் 491 பேரூராட்சிகளாகவும் இருக்கும்.

மன்னா்களின் தலைநகரமாக விளங்கிய ராமநாதபுரம், விவசாயம் சாா்ந்த வணிகம், அபரிமிதமான தொழில் வளா்ச்சியைக் கொண்டுள்ள பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்து... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டிய... மேலும் பார்க்க

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க