செய்திகள் :

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்பு குறிக்குள்):

அபிநவ் குமாா்: மதுரை சரக டிஐஜி (ராமநாதபுரம் சரக டிஐஜி)

பா.மூா்த்தி: ராமநாதபுரம் சரக டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி)

ஆா்.சக்திவேல்: சென்னை பெருநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு - 1 துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)

வி.பாஸ்கரன்: சென்னை வண்ணாரப்பேடடை துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கிழக்கு துணை ஆணையா்)

எஸ்.மேகலினா ஐடன்: சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா்)

டி.என்.ஹரி கிரண் பிரசாத்: சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா் (சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா்)

வி.காா்த்திக்: சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா் (பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-ஆவது அணி கமாண்டன்ட்)

ஜி.ஜவஹா்: சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

ஏ.சுஜாதா: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு வடக்கு துணை ஆணையா்).

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரான சந்தோஷ் ஹதிமானி கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி சரக டிஐஜி பொறுப்பை கவனிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க