செய்திகள் :

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

post image

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரிய புலியூர், சோலைமேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 37) என்பவர் குழந்தைத் திருமணம் தொடர்பான போக்சோ வழக்கில் கைதாகி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார்.

சிறையில் 7 வது பிளாக்கில் உள்ள 11-வது அறையில் அடைக்கப்பட்டு இருந்த தங்கராஜ், கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து கோவை மத்திய சிறை அதிகாரி சரவணகுமார் புகார் அளித்த நிலையில், காவல் ஆய்வாளர் அர்ஜுன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தங்கராஜ்  உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க