செய்திகள் :

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

post image

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.

2023 ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உண்மையான இம்பாக்ட் 2024ல், கிட்த்தட்ட 41 போட்டிகளில் 200க்கும் மேல் ரன்கள் வந்தபிறகுதான் தெரியவந்தது.

Dhoni

ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச டாப் 5 ஸ்கோர்கள் ஒரே சீஸனில் (2024) அடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகள் முறியடிக்கப்படடன. இதனால் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து விவாதங்கள் எழுந்தன. போட்டியின் தன்மை மாறிவிட்டது எனவும், சலிப்பூட்டுவதாகவும் சில நிபுணர்கள் கூறினர்.

Dhoni சொன்னதென்ன?

சமீபத்தில் தோனி இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "இந்த விதி கொண்டுவரப்பட்டபோது, இது தேவையற்றது என்றே நான் நினைத்தேன். ஐபிஎல் நன்றாகத்தான் உள்ளது, போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன, இதற்குமேல் இதை மேம்படுத்த அவசியமில்லை எனக் கூறினேன்.

Dhoni

இப்போது இது எனக்கு உதவுகிறது, ஆனால் அந்த நேரத்தில் அப்படி இல்லை. விக்கெட் கீப்பிங் செய்வதனால் நான் இம்பாக்ட் பிளேயர் இல்லை. நான் போட்டியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

பலர் இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிக ஸ்கோர் அடிக்கபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நான் அது சூழ்நிலையாலும், வீரர்களின் மனநிலையாலும்தான் என நம்புகிறேன்.

ஒரு எக்ஸ்டரா பேட்ஸ்மேன் இருப்பதனால் இவ்வளவு அதிக ரன்கள் வரவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் கம்ஃபர்டான மனநிலை வீரர்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது.

எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதனால் அல்ல, அவர்கள் இருக்கும் தைரியத்தால் அதிக ரன்கள் வருகின்றன. டி20 போட்டிகள் இப்படி பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன." என ஜியோ ஹாட்ஸடாரில் பேசியுள்ளார் தோனி.

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க

Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித்

ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி ப... மேலும் பார்க்க