செய்திகள் :

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

post image

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர் சிறப்பாக குஜராத் அணியைக் கட்டுப்படுத்தினர். பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி 97 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கி விட்டு அவர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.

Shreyas Iyer - Gill
Shreyas Iyer - Gill

ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், 'ஐ.பி.எல் இன் முதல் போட்டியிலேயே இப்படியொரு நல்ல இன்னிங்ஸை ஆடி 97 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சி. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்ததும் ரபாடாவை சிக்சருக்கு அடித்ததும் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. சஷாங்க் சிங் எடுத்த 44 ரன்கள் அணிக்கு ரொம்பவே தேவைப்பட்டது. அவரின் இன்னிங்ஸால்தான் நாங்கள் கூடுதலாக 30-40 ரன்களை எடுத்தோம்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக தொடங்கும் போது பௌலிங் செய்ய சவாலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தோம். இடையில் பந்து கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. சாய் சுதர்சனின் விக்கெட்டை அதனால்தான் எடுத்தோம். பந்தில் எச்சிலை தடவிக்கொள்ளலாம் என அனுமதித்திருப்பது பௌலர்களுக்கு பெரிதாக உதவுகிறது.

Shreyas Iyer
Shreyas Iyer

வைஷாக் விஜயகுமார் சுவாரஸ்யமான குணாதிசயத்தைக் கொண்டவர். அவரிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன. அவரால் நினைத்த இடத்தில் நினைத்த லெந்த்தில் வீச முடியும். அர்ஷ்தீப் சிங்கும் டெத் ஓவர்களில் நிறையவே உதவினார். சீசனுக்கு முன்பாகவே ஒரு அணியாக கூட்டுறவை எட்ட என்னெவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தோம். அணியின் மீட்டிங்களில் கூட கேப்டனான நான் மட்டும் பேசாமல் அனைவரும் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தினோம்.' என்றார்.

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க